Pages

இந்த வலைப்பூவை தொடர்ந்து மு(நு)கரும் அன்பு நெஞ்சங்கள்

Sunday, January 27, 2013

விமர்சனம்:1 ஆக்கம்:-க.சரவணன்,

உங்களுக்காக சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் (நிரந்தர) வாக்குறுதி கொடுத்துக்கொண்டே இருக்கும் நம் நாட்டின் அரசியல் வியாதிகளுக்கு மொத்தமாக ஆப்படிக்கும்படி இப்படியா ஒரு ஆப்ரேஷன் திட்டம் தீட்டுவது?



நீங்கள் சொல்வது போல் எல்லாம் நிறைவேற்றிவிட்டால் அப்புறம் நார்வே நாடு போல் சின்ன குழந்தைகளுக்கு கூட ஜனாதிபதி அளவுக்கு இசட் பாதுகாப்புடன், கோடீஸ்வர பெருமுதலாளிகளின் எல்லா சொத்துக்களையும் ஆளப்பிறந்த ஒரே வாரிசுக்குரிய சுகபோகத்துடன் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் வாழ்ந்து கொண்டிருப்பான்.



இதற்குத்தானா இந்த அரசியல் வியாதிகள் இவ்வளவு சிரமப்பட்டு நாட்டைக் கெடுத்து நாட்டு மக்களை முழு நேர குடிகாரர்களாக்கும் தொலை நோக்கு பார்வையுடன், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்புக்கு பொதுஜனத்தை அல்லல் படவைத்து, சாலைகளில் சுங்கம் முதல் குடிக்கும் நீருக்கு பணம் வரை கடைசி சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சி அப்படி செத்து விழும் பொது ஜனத்தையும் புதைக்க ஆகும் செலவை மற்றொரு பொது ஜனத்திடம்  இருந்தே வரியாக வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்?



இளைய சமுதாயத்தின் கவனத்தை தொலைக்காட்சி, மது, கேளிக்கை பக்கம் மட்டும் திட்டமிட்டு திருப்பிவிட்டு, நூலகம் மற்றும் வாசிப்பு அனுபவத்தை அவர்கள் மனதில் தோன்றச்செய்யாமல் வைத்திருப்பது மட்டுமே இப்போது அரசியல் வியாதிகளின் ஒரே ஒரு முக்கியமான ஆயுதம்.



குறைந்தது 60 சதவீத இளையதலைமுறையாவது படித்து (பாடப்புத்தகத்தை மட்டும் அல்ல) சிந்திக்கத்தொடங்கினால் மட்டுமே உங்களுடைய ஆப்ரேஷன் 2000 திட்டத்தை எங்கள் உரிமை என்று கேட்டுப் பெறும் காலம் வரும்.


ஓஷோவை பின்பற்றினால் கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை

அண்ணே வணக்கம்ணே !
ஓஷோவை பத்தி கருத்து சொல்ற அளவுக்கு நாம ஜூரி இல்லின்னாலும்  என்னை பத்தி எனக்கு எவ்ளோ தெரியுமோ அந்த அளவுக்கு அவரை பத்தி  புரியும். (இங்கே தெரியும்ங்கற வார்த்தைய யூஸ் பண்ணாததை கவனிங்க)

ஓஷோ எந்த கிரக காரகத்தின் கீழே வருவாருன்னு நம்ம விமல் மெயில் மூலமா கேள்வி கேட்டிருந்தாரு. அவருக்கு பதில் சொல்ற சாக்குல ஓஷோவை பத்தி கொஞ்சம் ஃப்ளாஷ் பேக் பண்ணிக்கலாமேன்னுதான் இந்த விரிவான பதில்.

ஓஷோவை படிச்சதுல அவருக்கும் மற்ற ஹோலிமென்னுக்கும் இடையிலான வித்யாசங்களை ரொம்ப நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது.


ஓஷோவை வெறுமனே படித்து அவர் குறித்த தகவல்களை   நம் மூளை என்ற கம்ப்யூட்டரின்  இன்னொரு ட்ரைவில்  சேமித்து வைத்துக்கொண்டால்  அவர் ஜஸ்ட் இன்னொரு   சிந்தனையாளர் மட்டுமே.

ஓஷோவை படித்து அவர் காட்டிய வழியை புரிந்து அவ்வழியில் நம் பயணத்தை துவங்கிவிட்டால் நவகிரக காரகமும் அவரில் இருப்பதை உணரலாம்.

அதுமட்டும் அல்ல அவர் சொல்லி வந்த ஏற்றுக்கொள்ளும் தன்மை   நம்மில் முளை விடுமானால் நவகிரகங்களின் பிடியிலிருந்தும் முற்றும் விடுபடலாம்.


ஓஷோ தனித்தன்மையுடன் தனித்து நிற்பதால் -அவரது  ஒளியை பலர் கடன் வாங்கி பிரகாசிப்பதால் அவர் சூரியன் (சூரியன் =தனித்து இயங்குபவர்,சொந்த ஒளி கொண்டவர்)

மனம் - அதன் செயல்பாடு - மனதை என்ன செய்யவேண்டும் என்று  ஆக்யுரேட்டா -சைனிடிஃபிக்கா சொன்னதால அவர் சந்திரன் ( சந்திரன் = மனோகாரகன்)

ஓஷோ தமது முன்னோடிகள் அனைவரிலுமிருந்து வேறுபட்டு புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டு -பழமை வாத கருத்துக்களுடனும் - சமகாலத்தவருடனும் -ஹிப்பாக்ரடிக் அரசுகளோடும் யுத்தம் புரிந்ததால் அவர் செவ்வாய் ( செவ் =புரட்சி,யுத்த காரகன்)

ஓஷோ மேற்கு உலகத்தை பெரிதும் கவர்ந்ததால் ராகு.( ராகு =பிறமொழியினர் ,வெளி நாட்டினர் , நீலக்கண் உடையோர் )

லட்சக்கணக்கானவர்களில் தேடலை விதைத்து அவர்களுக்கு சரியான வழியை காட்டியதால் குரு (குரு=குரு)

அவரது முன்னோடிகள் செக்ஸை ஒரு சாக்கடையாய் கருதி ஒதுக்கி வைக்க அதில் இறங்கி அதுவும் உயிர் வாழ்தலின் பாகமே  என்ற உண்மையை உரக்க கூறி அதை குறித்த புரிதலின்றி  ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழியே இல்லை என்று அறிவித்து அதில் இறங்கி சுத்திகரித்ததால் அவர் சனி

(சனி = சாக்கடை /தூமை )


தமக்கு முன்னான ஆன்மீக வ்ரலாற்றை -அதன் அத்தனை முரண்பாடுகளையும் மீறி ஒருங்கிணைத்ததால் புதன்  (புதன் =ஒருங்கிணைத்தல்)

அறிவு வேறு ஞானம் வேறு என்பதை  தெளிவு படுத்தி  -  ஞானத்தின் உண்மை நோக்கம் அறிவை துறப்பதே -மீண்டும் குழந்தைகளாய் மாறுவதே - என்றதாலும் 

ஞானம் என்பது எப்போதோ -எங்கேயோ நிகழும் என்று  மற்றவர்கள் சொல்லிவைக்க இங்கே -இப்போதே என்றதாலும்  அவர் கேது ( கேது =ஞான காரகன்)

அவரது ஆடை,அணிகலன், மற்றும் அவர்  வாழ்ந்த சூழலை பொருத்து பார்த்தால் அவர் சுக்கிரன்  (சுக்கிரன் =ஆடம்பரம்)

ஜோதிடம் 360 க்ளியரன்ஸ் சேல்

2000,ஜூலை ,31 முதல் நாம வலையுலகத்துல எழுதிக்குவிச்ச ஜோதிட ஆய்வு கட்டுரைகளோட சாரத்தை ஜோதிடம் 360 ங்கற பேர்ல ஒரு  புத்தகமா வெளியிட்டது ஞா இருக்கலாம்.(பக்கங்கள் : 80 சைஸு: ஆனந்த விகடன் சைஸுங்கோ)

1989 ஃபிப்ரவரியிலருந்து சோசியம் பக்கம் ஒதுங்கி 1990 லயே ஒரு ட்யுட்டோரியல்ல  சம்மர்  கேம்ப் நடத்தின பார்ட்டி நாம.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஒரு ஒளிவு மறைவற்ற ஆராய்ச்சியாளரா  நாம பெற்ற அனுபவங்களின்தொகுப்பு தான் ஜோதிடம் 360.

மொத ஆயிரம் பிரதி வித்துப்போனதுல ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகி மறு அச்சு செய்தமா கொஞ்சம் போல பிரதிகள் தேங்கிப்போச்சு.

இப்பவும் ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னு போயிட்டு தான் இருக்கு. ஆனாலும் நமக்கு பெஸ்ட் செல்லர்னு ஒரு ஃபீலிங்கு.அது புடுங்கிக்கிட்டதால தேன் இந்த க்ளியரன்ஸ் சேல்.

ஆரம்பத்துல முதல் அச்சின் போது   நம்மாளுங்க 423 பேர் வரைக்கும்  ரூ.250 கட்டி முன்பதிவெல்லாம் பண்ணிக்கிட்ட புஸ்தவம்ணா. இதை மறந்துராதிங்க. அவிகளுக்கு தலா 2 பிரதி அனுப்பி நம்ம ஹானஸ்டிய நிரூபிச்சாச்சு.

இருக்கிற பிரதிகளை க்ளியர் பண்ணிரனும். இதனால இதுவரை ஜோதிடம் 36ல் ஐ வாங்காதவுக பெருவாரியா வாங்கனும்.அதே சமயம் நாட்டுக்கும் உபயோகம் இருக்கனும். என்ன பண்ணலாம்?

இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாம ப்ரப்போஸ் பண்ணிக்கிட்டிருக்கிற
ஆப்பரேஷன் இந்தியா 2000 .பற்றிய உங்கள் கருத்துக்களை (பாசிட்டிவா இருந்தாலும் சரி நெகட்டிவா இருந்தாலும் சரி 100 வார்த்தைகள் தமிழ்ல நம்ம மெயிலுக்கு <swamy7867@gmail.com>அடிச்சு விடுங்க. மாபெரும் விலைகுறைப்பை பெறுங்க.

ஆமாம்  இதுவரை ரூ.75 க்கு விற்கப்பட்ட ஜோதிடம் 360 உங்களுக்கு ரூ.50 க்கே அனுப்பப்படும். (கூரியர் செலவு தனிங்கோ) இந்த சலுகை பிரதிகள் உள்ளவரை மட்டுமே.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தி இன்னம் தெரியாதுன்னா  இங்கே  அழுத்தி  ஒரு ஓட்டு ஓட்டுங்க..

எச்சரிக்கை:
புத்தகம் அனுப்ப வேண்டிய விலாசத்தை  உங்கள் மெயிலில் தவறாது குறிப்பிடவும். நூலின் சலுகை விலையான ரூ50+கூரியர் கட்டணம் ரூ.30 ஐ எப்படி அனுப்பறது தெரியலியா? அதையும் உங்க மெயில்ல குறிப்பிடுங்க.


Sunday, November 28, 2010

நிலமெனும் நல்லாள்

 பூமியை தாய்ம்பாய்ங்க.மண் மாதாம்பாய்ங்க. ஒரு பாய்ண்ட் ஆஃப் வ்யூல இது நெஜம்தான். ஒரு வகையில நம்மையெல்லாம் பிரசவிச்சது இந்த பூமிதான். ஆனா தாய் மேலயே காதல் கொள்ற ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் மாதிரி மனிதனுக்கு இந்த பூமி மேல அளப்பரியாத காமமும் இருக்கிறாப்ல தோணுது. ( இன்னைக்கு நடக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர்  நில ஆக்கிரமிப்புக்கெல்லாம் இதான் காரணமோ என்னமோ?)

பழைய கற்காலம்,புதிய கற்காலத்துலருந்து மிருகபலம் அவனோட சஞ்சார வாழ்க்கையிலயும் தொடர்ந்திருக்கு.  ஆனா கண்ட நேரம் கண்டவளோட கூடி பிரிஞ்ச அதே மன நிலையில தான் இந்த மண் மங்கையையும் கையாண்டிருக்கான்.

ஸ்திர வாசத்துல, ஒரு குழுவா ஏற்பட்டு குழுவுக்குள்ளயே உடலுறவுகளும், குழந்தை பிறப்பும் ஏற்பட்டதால படிப்படியா ஆண்களோட ஆண்மை குறைஞ்சிட்டே வந்திருக்கனும்.

இருந்தாலும் விவசாயம்ங்கறது ஒரு உடலுறவுக்கிணையான இன்பத்தை அவனுக்கு கொடுத்திருக்கு.  ஆண்மையின் சிகரமா இருக்கிற ஆணுக்கு கேவலம் ஒரு பெண்ணின் கையளவு ........ மட்டும் திருப்தியை தரமுடியாது.  அவனுக்கு விசாலமான ...........தேவைப்பட்டிருக்கு அதான் நிலம்.

தன் உயிரைக்கொடுத்தாவது தன் துணையை காத்த மனித குலம், தன் துணையின் மானம், உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றாலும் நிலத்தை இழக்க துணிந்ததில்லைன்னு பார்க்கும் போது பெண்ணுக்கு இணையா, ஏன் பெண்ணை விட
உசத்தியா நிலத்தை நினைச்சிருக்காய்ங்க.

விவசாயம்ங்கறது  ஒரு உடலுறவு. ஆமாம். மனிதன் இந்த நிலமகளை எப்படியாவது மருவ  பார்க்கிறான்.  அந்த உள்மன எண்ணத்தின் வெளிப்பாடே விவசாயம்.

இந்த எண்ணம் மனித குலத்தின் எண்ணங்களிலேயே தொன்மையானது . சென்னை டீன் ஏஜ் காளைகள் இருட்டிய பின் பீச் மணலில்................வேணாம் பாஸ் தமிழ் மணம் மாதிரி  மிச்ச மீதி சைட் காரவுகளும் தடை  பண்ணிரப்போறாய்ங்க

ஆணில் ஆண்மை பொங்கிய காலத்தில் அவனுக்கு விவசாயம் ஒரு கூடல் போன்ற புளங்காகிதத்தை தந்தது. பெண்ணுடனான மிக குறுகியது . ஆனால் நிலமோ அப்படியில்லை. விரிந்து பரந்து வா வா என்று வரவேற்றது.

அவன் முயங்க இடம் கொடுத்தது. வஞ்சனையின்றி வாரி வழங்கியது. இவனும் தன் ரத்தத்தை வியர்வையாக்கி கொட்டி அவளை சூல் கொள்ள செய்தான். (மகசூல் என்ற வார்த்தையை கவனியுங்கள்)

இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது இந்த விளை நிலமே  ஒரு மகா யோனியோனு தோணுது. ( ஹும் வக்கிரம் பிடிச்சதுங்களுக்கு இப்படித்தான் தோணும்னு சொல்றது ஆருங்க) இன்னைக்கு வானளாவ எழுந்து நிக்கிற கட்டிடங்கள் எல்லாம் அவள் யோனியை மருவும் சக்தியற்று, செக்கெண்ணை அடங்கிய டப்பா வாய்க்கு மூடியாக உபயோகிக்கப்படும் வாழைத்தண்டுகளோ  என்று தோன்றுகிறது.
அவள் மேல் ஊற்றப்பட்ட தாரும், கான் க்ரீட் கலவைகளும் இதேசேதியைத்தான் எனக்கு தருது பாஸ்.

மனுஷன்ல உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். உள்ளதுனு சொல்ல தயக்கமா இருக்கு. ( இளைய தலைமுறை  எல்லாம்  சுய இன்பம், குட்கா, லாலா,மசாலா, டின் ஃபுட் ,ஜங்க் ஃபுட், போதை மருந்துன்னு மூழ்கி கிடக்கிறதை பார்த்தா தயக்கமாதான் இருக்கு.

நாட்ல வன்முறை தலைவிரிச்சாட காரணம் உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் தான். இந்த நிலை மாற பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்னு நானே எழுதியிருக்கேன்.

ஆனால் அந்த நாளோட ஒப்பிட்டா இந்த தேதிக்கு உள்ள  ஆண்மையெல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ஏன் இத்தனை வக்கிரம்னு யோசிச்சா.. நாம விவசாயத்தை விட்டு விலகி வந்துட்டதுதானோன்னும் தோணுது.

இன்னைக்கும் 70 சதவீதம் மக்கள் விவசாயத்து மேலதான் டிப்பெண்ட் ஆகியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் இன்னைக்கு நடக்கிறது விவசாயமான்னு எனக்கொரு சந்தேகம் உண்டு.

விவசாயம்ங்கறது ஒரு கூடல் மாதிரி நடக்கனும். மண்ணை முகர்ந்து,நக்கி , உதிர்த்து அதனோட பேசி, அதுல விழுந்து ,எழுந்து, படுத்து, உழுது, விதைச்சு பண்ற விவசாயம் எப்படி இருக்கும்.

இன்னைக்கு மண்ணை பரிசோதிக்க மண்பரிசோதனை நிலையம், என்ன விதைக்கலாம்னு சொல்ல ஒரு ஆள், என்ன உரம் போடலாம்னு சொல்ல ஒரு ஆள், உழுது போட ட்ராக்டர், இன்னைக்கு நடக்கிறது ரேப்புங்கண்ணா. அதுவும் கேங் ரேப்பு. அதுவும் ஆள் வச்சு பண்ற ரேப்பு.  அந்த பெண் என்னத்தை வாரி வழங்குவா?

மனிதன்  பசிச்சபோது தின்னு,  வீரியம் புரண்ட போது கூடி உடலளவுல வாழ்ந்த காலத்துல அவன் உடல் இயற்கையோட நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

எப்போ இவன் மனம்,புத்தி,அகங்காரம்னு அடுத்தடுத்த தளங்களுக்கு தாவினானோ அப்பமே இவனுக்கும் இந்த இயற்கைக்கும்  உள்ள தொடர்பு அறுந்தே போச்சு.

விவசாயத்துல ஈடுபட்டிருந்தப்போ அந்த நிலம் மாதிரியே இவன் மார்பும் ,மனசும் விரிஞ்சிருந்தது, எப்போ இவன் " நிலமெனு நல்லாள் நக"  பட்டணம் பார்க்க போனானோ எல்லாமே சுருங்கி போச்சு ( நீங்க நினைக்கிறதும் தான்).

எப்போ உடலுக்கு உழைப்பு குறையுதோ அப்போ புத்தி மெருகேறுது (அதுவும் குறுக்கு புத்தி) எப்போ மண்டை சூடு அதிகரிக்குதோ உடம்பு உருக ஆரம்பிக்குது. பலவீனம் தான் பாவங்களின் கங்கோத்ரி. தந்திரங்களின் தாய் வீடு.

என்னைக்கேட்டா அளப்பரிய  ஆண்மையுள்ளவன் செய்யக்கூடிய ஒரே தொழில் விவசாயம் . விவசாயத்தை பத்தி சிந்திக்கவோ, அதன் மேம்பாட்டுக்காக திட்டமிடவோ, நிலத்தில் இறங்கி உழைக்கவோ அளப்பரிய ஆண்மை தேவை.

இந்த பாழாய்ப்போன சாதீயத்தால, சாதிகளுக்குள்ளாறயே நடந்த திருமணங்களால, நெருங்கிய  சொந்தங்களில் நடந்த கலப்புகளால மூஞ்சில மீசையும் நெஞ்சுல ஆசையும் தான் இருக்கு. இந்த அழகுல விவசாயமாவது .. மக "சூலாவாது".

இன்னைக்கும் விவசாயம் மேல ஆர்வம் காட்டற பார்ட்டிங்க இருக்காய்ங்கன்னா அவிக தான்யா ஆண்பிள்ளை சிங்கங்கள். உதாரணமா  அகசூல் என்ற  இந்த வலைப்பூவை பாருங்க..

விவசாயம், தோட்டக்கலை,மூலிகைகள்  தொடர்பான  வலைப்பூக்கள் நடத்துபவர்கள் தங்கள் வலைப்பூவின் லிங்கை தந்தால் அவையும் இங்கு வெளியிடப்படும்